
கனவுகளிடையே
தான்
நிற்கிறது
உனக்கும்
எனக்குமான வாழ்க்கை.
எதிர்கொள்ளும்
பொழுதில்
தவறவிட்ட வார்த்தைகளைத்
தனிமையில்
எனக்கு நானே
பேசிக் கொள்வதில் கழியும்
உன் நினைவுகளைப்
போலவே
இக்கவிதை எழுதுவதற்கான
நேரங்களும் - மிக
நுண்ணிய கணங்களாக
கரைந்து கொண்டு.
No comments:
Post a Comment