
நாட் குறிப்பின்
வெற்றுத் தாள்கள்
தீர்ந்துக் கொண்டிருக்கின்றன.
நீண்ட நேரம்
உரையாடும் நட்பையும்
கலைந்து போகச்
சொல்லும்.
கற்பனை வேறு
மரணம் செய்து கொள்ளுவதாய்
நிழலாடுகின்றன.
விருப்பமான
மலரையும்
தள்ளி வைத்துவிடச்
சொல்லி விட்டேன்.
தனிமையில் இறுகும்
நரம்புகளுக்காக
இமைகளை
இறுக்கி மூடி
பல்லைக் கடித்துக்
கொள்ளுவதே
வழிகளெனாயிற்று.
உன்னை
கடந்து போக
போகிறேன் - இன்னும்
அடிவானத் தொலைவு தான்
முடமான கால்களுடன்.
உனக்காக
காத்திருக்கும் பொழுதுகள்
எனக்கு தகரம் தான்.
No comments:
Post a Comment