தாய் ஆனவன்


நினைவுகளில்
வழிந்தோடுகிறது - உன்
மிருதுவான நேசம்
நெஞ்சை வருடியபடி.

சுவாசம் மறக்கும்
இதயம் - உன்
நினைவுகளின் பாரம்
தாங்காமல்.

உபயோகப் படும்
சில
சிதறி விழும்
சொற்களைக் கூட
மௌனம் இறுக்க
அடைத்துக் கொள்ளும்.

எதிரில் கிடக்கும்
ரோஜா - உன்
இதழ்களை
ஞாபகப் படுத்தும்.

கனவுகளை
உண்ணும்
உன் நினைவுகள்
உறக்கத்தோடு இழப்பேன்
என்னையும்.

வானம் எதிரிலிருந்தும்
மேகம் பிரிக்கும்
இடைவெளி.

ஒளித் திரையில்
மறைந்தாலும் என்னுள்
முழுவதுமாய்
நிறைந்திருக்கும் நீ!

No comments: