அந்த கவிதை


சில நேரங்களில்
நிமிடங்களாய்
மணிகளாய் காலங்கள்
கடந்த போதும்
மறந்து விட தோன்றுகிறது.
எழுது – என்றால்
இன்னொரு நாள் என்கிறது
சோம்பல் மனது
தள்ளி தள்ளி,
போகிறது – என்றோ
உன் நினைவான அந்த கவிதை!